Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா: பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


பாலக்கோடு:
 


பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாலக்கோடு நகர அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு நகர அதிமுக தலைவர் ராஜா தலைமை வகித்தார். விழாவில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று அண்ணாவின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர். பாலக்கோடு பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டதால் விழா சிறப்பாக நடைபெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies