தருமபுரி:
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி, தருமபுரியில் உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டனர். தொடர்ந்து, நான்கு ரோட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வுக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர்கள் ஆர். அசோகன் மற்றும் டி.ஆர். அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அதிமுக தலைமைக்கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் டி.கே. ராஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர், அவரது அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்தனர். பெரியார் சிலை அருகிலிருந்து அண்ணா சிலை வரை நடைபெற்ற ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். இதனால் தருமபுரி நகரில் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாகமாக நடைபெற்றது.
.gif)

.jpg)