தருமபுரி, ஆக. 13:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமைப்பணிகள் தேர்வு – நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (Combined Technical Services Examination – Non-Interview Posts) தருமபுரி மாவட்டத்தில் கணினிவழி தேர்வாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4,541 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்வு நடைபெறும் தேதிகள்
தருமபுரி மாவட்டத்தில் பின்வரும் தேதிகளில் கணினிவழித் தேர்வு நடைபெறுகிறது:
- 16.08.2026 – முற்பகல் மட்டும்
- 17.08.2026 முதல் 20.08.2026 வரை – முற்பகல் மற்றும் பிற்பகல்
- 07.09.2026 முதல் 09.09.2026 வரை – முற்பகல் மற்றும் பிற்பகல்
- 10.09.2026 – பிற்பகல் மட்டும்
- 11.09.2026 – முற்பகல் மட்டும்
- 12.09.2026 – பிற்பகல் மட்டும்
தேர்வு நேரங்கள்
முற்பகல் அமர்வு: காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை.
பிற்பகல் அமர்வு: மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
தருமபுரியில் 4 தேர்வு மையங்கள்
4,541 தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்காக தருமபுரி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
- ஜெயம் பொறியியல் கல்லூரி – பென்னாகரம் வட்டம்
- ஸ்ரீனிவாசா பொறியியல் கல்லூரி – பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
- ஜெயலஷ்மி தொழில்நுட்பக் கல்லூரி – நல்லம்பள்ளி வட்டம்
- ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி – நல்லம்பள்ளி வட்டம்
தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தேர்வு மையங்களின் நுழைவு வாயில்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 8.59 மணி வரையிலும், பிற்பகல் தேர்வுக்கு மதியம் 1.59 மணி வரையிலும் திறந்திருக்கும். அதன்பிறகு, முற்பகல் 9.00 மணிக்கும், பிற்பகல் 2.00 மணிக்கும் நுழைவு வாயில்கள் கட்டாயமாக மூடப்படும். எனவே, இந்த நேரத்திற்கு பிறகு வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தாமதத்தைத் தவிர்த்து, போதிய நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்தை சென்றடைய வேண்டும்.
மொபைல் போனுக்கு தடை
தேர்வு மையத்திற்குள் மொபைல் போன், புளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
பேருந்து வசதிகளும் ஏற்பாடு
தேர்வர்களின் போக்குவரத்து வசதிக்காக அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நாளில் கடைசி நேர பதற்றம் மற்றும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்கும் வகையில், தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)