மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ரா. சதீஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த. மணிமேகலை, துணை ஆட்சியர் (வருவாய்) சு. பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) க. சரண்யா, தாசில்தார்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருத்தப் பணியின் முக்கிய அம்சங்கள்
2026 ஜனவரி 1-ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இச்சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் கீழ்கண்ட பணிகள் செய்யப்பட உள்ளன:
-
18 வயது பூர்த்தி செய்த புதிய வாக்காளர்களைச் சேர்த்தல்
-
இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்களின் பெயர் நீக்கம்
-
பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தவறுகள் திருத்தம்
-
ஒரே நபர் பல இடங்களில் பதிவாகாமல் தடுப்பது
இந்த பணிகள் வீடு வீடாகச் சென்று தகவல் சரிபார்ப்பு மூலம் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
சிறப்பு முகாம்கள் — டிசம்பர் 2025 & ஜனவரி 2026
மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகள் இத்திருத்த பணிக்குள் அடங்கும்:
-
பாலக்கோடு
-
தருமபுரி
-
பென்னாகரம்
-
பாப்பிரெட்டிப்பட்டி
-
அரூர்
.gif)

.jpg)