தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 76வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை உறுதிமொழி நிகழ்ச்சி இன்று (26.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இஆப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், “இந்திய மக்களாகிய நாம்…” என தொடங்கும் அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்து, அனைத்து துறை அலுவலர்களும், பணியாளர்களும் அதனை தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அரசியலமைப்பு முகப்புரையில் வலியுறுத்தப்பட்டுள்ள
– இறையாண்மை,
– சமநலச்சமுதாயம்,
– சமயச்சார்பின்மை,
– மக்களாட்சி குடியரசு,
– நீதி, சுதந்திரம், சமன்மை,
– சகோதரத்துவம் (பிரதர் ஹுட்)
போன்ற அடிப்படை மதிப்புகளை காக்கவும், நாட்டின் ஒற்றுமை–ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் குடிமக்கள் அனைவரும் உறுதிமொழியெடுத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், இணை இயக்குநர் – மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சாந்தி, மேலும் பல துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)