Type Here to Get Search Results !

ஏ. கொல்லஅள்ளி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!.


தருமபுரி – நவம்பர் 22 -

தருமபுரி மாவட்டம் ஏ.கொல்லஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொட்டாய்மேடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக முறையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காததால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர். 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில், பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பெண்கள் காலி குடங்களுடன் தருமபுரி—ஏ.கொல்லஅள்ளி சாலையை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவல் கிடைத்ததும், ஊராட்சி செயலாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குடிநீர் விநியோகம் உடனடியாக சீர்செய்யப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies