தருமபுரி, அக். 28 -
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு தனது சுற்றறிக்கை எண் 13, நாள் 13.10.2025 மூலம், ஹஜ் 2026 புனித யாத்திரையில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளுக்காக மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிக அடிப்படையில் சவூதி அரேபியாவிற்கு அனுப்ப நிகர்நிலை (Online) மூலம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை — சுமார் இரண்டு மாதங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானோர்:
மத்திய / மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப் படை அதிகாரிகள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய / மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் நிரந்தர பணியில் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணியாற்றும் காலம் அவர்களின் அதிகாரப்பூர்வ பணிக்காலமாக கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன விதிமுறைகள் ஆகியவற்றை மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதளமான www.hajcommittee.gov.in மூலம் அறிந்து கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpg)