தருமபுரி, செப்டம்பர் 15 (ஆவணி 30):
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக முன்வைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.