Type Here to Get Search Results !

தருமபுரியில் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்காக இலவச கண் பரிசோதனை முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.


தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (15.05.2025) பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாம், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஓட்டுநர்களின் பார்வை திறனை உறுதி செய்யும் நோக்கத்தில் நடத்தப்பட்டது.


முகாமின் தொடக்கவிழாவில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:

"மாணவர்கள் பாதுகாப்பிற்காக, பள்ளி வாகனங்களில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் ஓட்டுநர்களின் உடல் நலமும் முக்கியத்துவம் வாய்ந்தது. கண்ணே ஓட்டுநர்களின் வழிகாட்டி என்பதால், அவர்கள் கண் பரிசோதனை தவறாமல் மேற்கொள்வது அவசியம்."


இம்முகாமில் மொத்தம் 256 ஓட்டுநர்கள் பரிசோதனை செய்துகொண்டனர். அதில் 15 ஓட்டுநர்களுக்கு பார்வை குறைபாடுகள் மற்றும் கண்ணில் புரை போன்ற பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மேலதிக சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.


மாவட்ட ஆட்சித் தலைமையில், கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பள்ளி வாகன ஆய்வுக் கூட்டத்தில் வாகனங்களின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் — சீட் பெல்ட், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, சீ.சி.டி.வி, அவசரக் கதவுகள் மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. சி.க. ஜெயதேவ்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு. அ.க. தரணீதர் மற்றும் திரு. சு. பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884