முகாமின் தொடக்கவிழாவில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
"மாணவர்கள் பாதுகாப்பிற்காக, பள்ளி வாகனங்களில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் ஓட்டுநர்களின் உடல் நலமும் முக்கியத்துவம் வாய்ந்தது. கண்ணே ஓட்டுநர்களின் வழிகாட்டி என்பதால், அவர்கள் கண் பரிசோதனை தவறாமல் மேற்கொள்வது அவசியம்."
இம்முகாமில் மொத்தம் 256 ஓட்டுநர்கள் பரிசோதனை செய்துகொண்டனர். அதில் 15 ஓட்டுநர்களுக்கு பார்வை குறைபாடுகள் மற்றும் கண்ணில் புரை போன்ற பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மேலதிக சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
மாவட்ட ஆட்சித் தலைமையில், கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பள்ளி வாகன ஆய்வுக் கூட்டத்தில் வாகனங்களின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் — சீட் பெல்ட், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, சீ.சி.டி.வி, அவசரக் கதவுகள் மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. சி.க. ஜெயதேவ்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு. அ.க. தரணீதர் மற்றும் திரு. சு. பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக