Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் ரூ.20 இலட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை சீரமைக்கும் பணி தொடக்கம்.

பாலக்கோடு, ஏப்.24:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பயன்படும் நவீன எரிவாயு தகன மேடை சீரமைக்கும் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டன.


2018ஆம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த எரிவாயு தகன மேடை, கடந்த ஓராண்டாக தொழில்நுட்ப பழுதால் செயலற்ற நிலையில் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை முன்னிட்டு, பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இப்பணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி இன்று பூஜை செய்து முறையாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் பி.எல்.ஆர்.ரவி, வகாப்ஜான், சரவணன், மோகன், ஜெயந்திமோகன், திமுக ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, திமுக நிர்வாகிகள் கணேசன், பச்சியப்பன், கிளை செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


சீரமைக்கப்படும் எரிவாயு தகன மேடை முறையான தூய்மையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யும் வகையில் பலருக்கும் பயன்படவுள்ளது என கூறப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies