Type Here to Get Search Results !

தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.


 தர்மபுரி, ஏப்ரல் 1:

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட (MGNREGA) தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இவ்வார்ப்பாட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகிக்க, முன்னிலை மாதப்பன் மற்றும் நிர்வாகிகள் மல்லையப்பன், ராஜ் கிருஷ்ணன், அலமேலு, ராஜகோபால், பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்:

  1. தொகை நிலுவை வழங்கல்:

    • 2024 நவம்பர், டிசம்பர், 2025 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய ஐந்து மாதங்களுக்கு வழங்க வேண்டிய தினசம்பளம் ரூ.2,985 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.

  2. நிதி ஒதுக்கீடு:

    • 2025-2026 நிதியாண்டிற்காக ரூ.4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

  3. வேலை நாள்கள் மற்றும் சம்பளம்:

    • ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் மற்றும் தினசம்பளம் ரூ.700 வழங்க வேண்டும்.

  4. பணி இட வசதிகள்:

    • வேலை இடங்களில் நிழல் கூடம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    • ஒகேனக்கல் குடி தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தரப்பட வேண்டும்.

  5. வேலைவாய்ப்பு உறுதி:

    • வேலை வேண்டி விண்ணப்பங்களை ஊராட்சி செயலாளர்கள் பெற்றுக்கொண்டு தனி பதிவேட்டில் பதிவு செய்து வேலை வழங்க வேண்டும்.

    • 100 நாள் பணி முடிந்ததும் பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும்.


தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்து, பணம் நிலுவை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies