Type Here to Get Search Results !

தர்மபுரி மதிகோன்பாளையம் ராமாக்காள் ஏரிக்கரையில் ஸ்ரீ சக்தி விநயகர் கோயில் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் ஊர்வலம்.


தர்மபுரி டவுன் மதிகோன்பாளையம் ராமாக்காள் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் (4ம் தேதி) நடைபெறவுள்ளது. இதையொட்டி, கும்பாபிஷேக விழா கடந்த மார்ச் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


விழாவை முன்னிட்டு, மதிகோன்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, காலை கங்கை பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கங்கை தீர்த்தம், பால்குடம் மற்றும் முளைப்பாரிகையுடன் முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


மாலையில் வாஸ்து ஹோமம், முதல் யாகசாலை பூஜை, திரவிய ஆஹூதி, விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.


விழாவின் முக்கிய நிகழ்வான (4ம் தேதி) அதிகாலையில் 2ம் கால யாகசாலை பூஜையும், காலை 9 மணிக்கு சக்திவிநாயகர், முருகன், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மதிகோன்பாளையம் ஊர்கவுண்டர், ஊர்தூரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies