Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தொல்லியல் துறை பாதுகாப்பு பகுதியில் கட்டிடங்கள் கட்டிய திமுக பிரமுகர்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


தர்மபுரி, ஏப்ரல் 17: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான சென்ராய பெருமாள் கோவிலுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏக்கத்துடன் கேள்விகள் எழுப்பியுள்ளார்கள்.

தகடூர் பகுதியில் அமைந்துள்ள சென்ராய பெருமாள் கோவில், அதியமான மன்னரின் ஆட்சி காலத்தை சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இந்த கோவில் வளாகம் தொல்லியல் துறையின் பாதுகாப்பு சுற்றுவட்டத்திற்குள் அமைந்துள்ளது. இந்த வகையில், கோவிலை சுற்றியுள்ள 100 மீட்டர் பரப்பளவில் எந்தவிதமான கட்டுமானமும் மேற்கொள்ள முடியாது என்பது தொல்லியல் விதிமுறை.


ஆனால், இவ்விதிமுறையை மீறி, கூறப்படுகிறது போலி பட்டா ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, கோவிலின் நுழைவாயில் அருகில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களின் சுவர்களில் “AS எனது முகவரி – திமுக” என எழுதி, முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் உருவப்படங்களும் வண்ண விளக்கங்களுடன் வரையப்பட்டுள்ளன. இதனை திமுக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம் கட்டியுள்ளார் என சமூக ஊடகங்களில் புகார்கள் வலுத்துள்ளன.


இந்த விவகாரம் தொடர்பாக, பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றம் ஒரு வருடத்துக்கு மேல் முன்பே தீர்ப்பு வழங்கி, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை எந்தவொரு அரசு துறையாலும் நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் நிலங்களை அரசால் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், இவ்விசயத்தில் அரசு நிலைமை ஏன் மந்தமாக உள்ளது என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, குறிப்பாக வாட்ஸ்அப்பில் தகவல்கள் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் ஏ.எஸ்.சண்முகம், ஒரு தனிநபருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதும், இது தொடர்பாக விசாரணை கோரிக்கைகள் வலுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பு வெளிப்படுத்துகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884