Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தேசிய புள்ளியல் அலுவலகத்தின் 75வது ஆண்டு நிறைவு விழிப்புணர்வு பேரணி


தர்மபுரி, ஏப்ரல் 16:
மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியல் அலுவலகம் சார்பில், 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி, தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகிலிருந்து தொடங்கி, தர்மபுரி நகராட்சி பூங்கா அருகே முடிவடைந்தது.


பேரணியை, புள்ளியல் அலுவலகத்தின் முதன்மை புள்ளியியல் அலுவலர் மதிவாணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில் புள்ளியல் துறையின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசாதங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில், மத்திய அரசின் தேசிய புள்ளியல் அலுவலக பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி, புள்ளியல் துறையின் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்கான முயற்சியாக அமைந்தது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884