Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மாரண்டள்ளி புதுத்தெருவில் கஞ்சா விற்ற பெண் கைது.!

Top Post Ad


தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி சுற்றுவட்டார பகுதிகளில்  கஞ்சா விற்பனை செய்வதாக மாரண்ட அள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி,  சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று மாலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது புதுத்தெருவில் ஒரு பெண், கையில் மஞ்சப்பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை  பிடித்து விசாரித்தில் புதுத்தெருவை சேர்ந்த ஈஸ்வரி என்பதும், இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 


இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்  அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884