Type Here to Get Search Results !

தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் ‘அடுத்த தலைமுறை’ சங்க தொடக்க விழா நடைபெற்றது.


தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் அடுத்த தலைமுறை சங்கம் துவக்க விழா  நடைபெற்றது.


இக்கருத்தரங்கம் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் அரிமா சுப்பிரமணி மற்றும் தாளாளர் டாக்டர் கோவிந்த் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், அறங்காவலர் காயத்ரி கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கல்லூரி முதல்வர்  தமிழரசு வாழ்த்துரை வழங்கினார், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறைத் தலைவர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார்.


மல்டிபிரனர்  அகாடமி அமைப்பின் இணை நிறுவனர் பூந்தமிழ் குமரன் அமைப்பை தொடங்கி வைத்து அமைப்புகள் குறித்த கருத்துரை வழங்கினார். நிறைவாக உதவிப் பேராசிரியர் குமுதா நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies