Type Here to Get Search Results !

சோமனஅள்ளியில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2-வயது பெண் குழந்தை சாவு.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (31), லாரிடிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆனந்தி, என்ற மனைவியும், 5 மற்றும் வயதில்  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.


நேற்று காலை 2-வது பெண் குழந்தை ஹர்னிகாவை (2) சோமனஅள்ளியில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஹர்னிகா திடிரென வீட்டின் முன்பு இருந்த  தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.


இதனையறிந்த  உறவினர்கள் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். அங்கு  குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியில் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் விழுந்து  குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies