Type Here to Get Search Results !

பச்சமுத்து மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் 11ம் தேதி வரை கல்லூரி சந்தை நிகழ்ச்சி.


தருமபுரி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் 2024-25-ஆம் ஆண்டிற்கு கல்லூரி சந்தை தருமபுரி வட்டாரம், குண்டல்பட்டி பச்சமுத்து மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 09.01.2025 முதல் 11.01.2025 வரை ஆகிய 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.


இச்சந்தையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களான சிறு தானிய உணவு பொருட்கள், சணல் பைகள், பாக்கு தட்டுகள், செயற்கை ஆபரணங்கள், கால் மிதியடிகள், புளி, புடவைகள், திண்பண்டங்கள், பால்கோவா, பாப்கான், சத்துமாவு, மசாலா பொடி வகைகள், மரசெக்கு சமையல் எண்ணெய் வகைகள், சுண்டக்காய் வத்தல் மற்றும் பிற உற்பத்தி பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்படுகிறது.


மேற்கண்டவாறு, 09.01.2025 முதல் 11.01.2025 வரை நடைபெற உள்ள கல்லூரி சந்தையில் பொது மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies