Type Here to Get Search Results !

சௌமியா அன்புமணியை விடுதலை செய்யக்கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்; தமிழக அரசை கண்டித்து, சாலை மறியல் முயற்சி. 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது.


அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியிம், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், தமிழக அரசை கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி, சௌமியா அன்புமணி தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சௌமியா அன்புமணி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.  


இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, பென்னாகரம் பேருந்து நிலையத்தில், 50க்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் செய்ய முற்பட்டனர், உடனடியாக பென்னாகரம் காவல்துறையினர் தடுத்து  பாமகவினர், சுமார் 50 பேர், கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884