Type Here to Get Search Results !

வக்கீல் மீது கொலை வெறி தாக்குதல், 1 பெண் உட்பட4 பேர் கைது, மாரண்டஹள்ளி அருகே பரபரப்பு.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பன்னி அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது.35) இவர் வக்கிலாக உள்ளார், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது.40) என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.


இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு வீட்டில் இருந்து  செந்தில் தனது இரண்டறை வயது மகன் அன்புசெழியனை அழைத்துக் கொண்டு  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மற்றும் அவரது உறவினர்களான வெங்கடேசன் (வயது.30), ஈஸ்வரன் (வயது. 29), செளமியா (வயது.38) ஆகியோர் செந்தில் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடுவாளால் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளனர்.


இதனை தடுக்க வந்த செந்திலின் தந்தை பெருமாள் மற்றும் சித்தி லட்சுமியையும் கட்டை மற்றும் கத்தியதால் தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இதுகுறித்து செந்தில் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில்  கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கண்ணன், வெங்கடேசன் ஈஸ்வரன், செளமியா ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


வக்கில் குடும்பத்தினரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies