Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

22.01.2025-ம் தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் எதிர்வரும் 22.01.2025-ம் தேதியன்று ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் (Whats App) செய்தி உலா வருவதாக தெரியவருகிறது.


இந்நேர்வில் அரசு கடித எண். 5401/AH3-2/2024-1, Animal Husbandary, Dairiying, Fishieries and Fisherman Wealfare Dept., dated 28.11.2024-ன் படி வழங்கப்பட்டுள்ள அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி (SOP) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக உரிய வழிமுறையாக அரசாணை பெற்றும், அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.


எனவே மேற்படி 22.01.2025-ம் தேதியன்று ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதியேதும் வழங்கப்படவில்லை என்றும், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் நேர்வில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய சட்டப்படடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.என  தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884