Type Here to Get Search Results !

தர்மபுரி அஞ்சலி டெக்ஸ்டைல்சில் ஜவுளிகள் பொங்கல் பரிசு குழுக்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் கார் பரிசு வழங்கப்பட்டது.

தர்மபுரி நகரில் பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள அஞ்சலி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கடந்த தீபாவளி பண்டிகை முதல் பொங்கல் பண்டிகை வரை ஜவுளிகள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு பரிசுக்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அஞ்சலி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி தங்கம் கருப்பண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். 


முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பரிசு கூப்பன்கள் குலுக்கல் நடைபெற்றது. இதில் பென்னாகரத்தைச் சேர்ந்த திருமதி பிரியங்கா சக்திவேல்  முதல் பரிசான காரை வென்றார். இதேபோல் இரண்டாவது பரிசாக  மோட்டார் சைக்கிள், மூன்றாவது பரிசாக பிரிட்ஜ், நான்காவது பரிசாக எல்.இ.டி. டி.வி., ஐந்தாவது பரிசாக சோபா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளுக்கான அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த பரிசுகளை தமிழ்நாடு அரசு நகராட்சிகள் இணை ஆணையாளர் அசோகன், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, ஆசிரியர் முத்துராஜ், வழக்கறிஞர் சிவராஜ், தி.மு.க. மாவட்டத் துணை செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிகளை, பட்டிமன்ற பேச்சாளர் ஆசிரியர் சௌந்தர் பாண்டியன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட  ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies