Type Here to Get Search Results !

மகேந்திரமங்கலம் அடுத்த சீங்கேரி கிராமத்தில் நள்ளிரவில் 3 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்.


தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த சீங்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது.42), விவசாயியான  இவர் சொந்தமாக தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு அவரும் அவரது மனைவியும் ஆடுகளை வீட்டு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிவிட்டு தூங்கச் சென்றனர்.


நள்ளிரவு 2  மணிக்கு நாய்கள் குறைப்பதை கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 45 ஆயிரம் மதிப்புள்ள மூன்று ஆடுகளையும், காணவில்லை என தெரியவந்தது. எங்கு தேடியும் கிடைக்காததால் திருடி சென்ற மூன்று ஆடுகளை கண்டுபிடித்து தர கோரி  மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் மாணிக்கம்   அளித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies