Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பென்னாகரத்தில் வரும் 18ம் தேதி "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்.


மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 2024 டிசம்பர் மாதத்திற்கான முகாம் பென்னாகரம் வட்டத்தில் வரும் 18.12.2024 அன்று காலை 09.00 மணி முதல் 19.12.2024 காலை 09.00 மணி வரை நடைபெற உள்ளது. 


மேற்படி நாளில் மாவட்ட ஆட்சியர், வருவாய் வட்டத்தில் இருந்து கள தணிக்கையில், ஈடுபட்டு அரசு திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார். மேலும் 18.12.2024 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கள ஆய்வில் இருக்கும் மாவட்டத்தின் முதல்நிலை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டமும் அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்தல் தொடர்பாக பொது மக்களிடமிருந்து மனுக்களையும் பெற உள்ளார்கள் மேலும் மேற்படி முகாம் நாளில் வட்டத்தில் உள்ள நான்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் பட்டா மாறுதல் மனுக்களை அளித்து உடன் தீர்வு காண தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies