Type Here to Get Search Results !

பொ.மல்லாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் மூன்றாம் இடம்.


தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் SIDP 2.0ன் படி தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கார்த்திக், சஞ்சய் குமார், ராகவன், சுஜித் குமார் ஆகியோரின் கண்டுபிடிப்பு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தமைக்கான பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் காசோலையை தர்மபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி ஜோதி சந்திரா அவர்கள் வழங்கி பாராட்டினார்.


இந்நிகழ்வின் போது அப்பள்ளியின் வழிகாட்டி ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் திரு தமிழ் தென்றல் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு வேலு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்வை மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர் திரு கௌதம் சண்முகம் அவர்கள் சிறப்பாக வழி நடத்தினார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies