Type Here to Get Search Results !

ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் தீர்மானம்.


தமிழகம் முழுவதும் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி காலம் இந்த மாத இறுதியில் முடிவடையும் நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐந்து வருட கால வரவு செலவுகள் கணக்கு பார்க்கப்பட்டு கவுன்சிலர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. 


அதன் பின்பு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் பேசுகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கவுன்சிலர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நன்றி கூறினார். இன்று நடைபெற்று வரும் ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வருவாய்களை மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா, ஒன்றியக் குழு துணைத் தலைவர் அற்புதம் அன்பு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies