Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பொதுமக்களிடமிருந்து 405 மனுக்கள் பெறப்பட்டது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ இன்று பெற்றுகொண்டார்‌. 


தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்டரங்கில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (30.12.2024) நடைபெற்றது. இம்மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பொதுமக்களின்‌ கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம்‌ அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்‌. 


இன்றைய தினம்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பொதுமக்கள்‌ சாலை வசதி, குடிநீர்‌ வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள்‌ வேண்டியும்‌, பட்டா வேண்டுதல்‌, சிட்டா பெயர்‌ மாற்றம்‌, புதிய குடும்ப அட்டை வேண்டுதல்‌, வாரிசு சான்றிதழ்‌, வேலைவாய்ப்பு, இலவச விட்டுமனை பட்டா, முதியோர்‌ ஓய்வூதியத்‌ தொகை உள்ளிட்ட இதர உதவித்‌ தொகைகள்‌ உட்பட பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்தும்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள்‌, உபகரணங்கள்‌ வேண்டியும்‌ மொத்தம்‌ 405 மனுக்கள்‌ வரப்பெற்றன. 


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள்‌ அனைத்தும்‌, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்‌ வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன்‌ வழங்கிட வேண்டுமெனவும்‌, பொதுமக்கள்‌ அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள்‌ மீது துறை அலுவலர்கள்‌ அரசின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும்‌ எனவும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப. அவர்கள்‌ தெரிவித்தார்‌. இன்றையதினம்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.37 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பேட்டரியால்‌ இயங்கும்‌ சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள்‌ மற்றும்‌ ஊன்றுகோலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள்‌ வழங்கினார்கள்‌. 


மேலும்‌, தருமபுரி மாவட்டம்‌, காரிமங்கலம்‌ வட்டம்‌, பைசுஅள்ளி தரப்பு, குண்டலஅள்ளி கிராமத்தைச்‌ சேர்ந்த திருமதி. சத்யா க/பெ. பிரதாப்‌ என்பவரது இரண்டரை (2.5) வயது மகள்‌ தேன்விழி என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தார்‌. இவர்‌ இணைய வழியில்‌ விண்ணப்பித்து 15 நாட்களே ஆன நிலையில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ சென்னை இயக்குநர்‌ அவர்களிடம்‌ தொலைபேசி வாயிலாக சிறப்பு அனுமதி பெற்று அங்கிகரிக்கபட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி,இ.ஆஃப., அவர்களால்‌ இன்று மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. 


இம்மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி. ஆர்‌.கவிதா, தனித்துணை ஆட்சியர்‌ திரு.சுப்பிரமணி, திட்ட இயக்குநர்‌ (மகளிர்‌ திட்டம்‌) திருமதி.லலிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ திருமதி.செண்பகவள்ளி, மற்றும்‌ அரசுத்துறை அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884