Type Here to Get Search Results !

புலிக்கரையில் கருக்காத்த நாயகி உடனமைந்த முல்லைவண்ணநாதர் கோயில் கும்பாபிஷேகம் விழா நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், தர்மபுரி அருகே  புலிக்கரை  கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கருக்காத்த நாயகி உடனமைந்த முல்லைவண்ணநாதர் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. இந்த விழாவானது  நேற்று முன்தினம்  கணபதி பூஜை மற்றும்  கொடியேற்றத்துடன்  தொடங்கியது.  


முக்கிய நாளான இன்று அதிகாலை  கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், மற்றும் நான்கு கால வேள்வி பூஜையுடன், ரக்ஷாபந்தன, நாடிசந்தனம்,   செய்யப்பட்டு பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து  யாகசாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்தம் எடுத்து சென்று  கோயில் உச்சியில் உள்ள சிவலிங்கத்திற்க்கு  புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.


பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ முனியப்ப சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு,  பூக்களால் அலங்கரித்து  மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  ஊர் பொதுமக்கள் , பூசாரி கிருஷ்ணன் மற்றும் விழாகுழுவினர்,  செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884