17 முதல் 25 வயதிற்குட்டபவர்கள் பிரிவில் 01.01.2000 முதல் 31.12.2007 அன்றுக்குள் பிறந்தவர்களும், 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 31.12.1999க்குள் பிறந்தவர்களும் கலந்து கொள்ளலாம். 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான் கோட்டையிலிருந்து தொடங்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக தடங்கம் மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தோக்கம்பட்டி வழியாக செந்தில் பப்ளிக் பள்ளி வந்தடையுமாறும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான் கோட்டையிலிருந்து தோக்கம்பட்டி வழியாக தடங்கம் மேம்பாலம் வரை சென்று திரும்பி மீண்டும் அதே வழியாக செந்தில் பப்ளிக் பள்ளி வந்தடையுமாறும் நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/-, நான்கு முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/-, மற்றும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்குபெறும் பயனாளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.
எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்கேற்று தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.