Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் எம்.ஜி.ஆர் அவர்களின் 37ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.


பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்  அவர்களின் 37 ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு -  முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அதிமுக நகர கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்  அவர்களின் 37ம் ஆண்டு நினைவு தினம் நகர செயலாளர் ராஜா தலைமையில்   அனுசரிக்கப்பட்டது. 


இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன்,    முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன்,  ஒன்றிய செயலாளர் கோபால்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதையடுத்து பேருந்து  நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வெங்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில்  அதிமுகவின் முன்னாள் நகர செயலாளர் சங்கர்,  முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், புதுர் சுப்ரமணி, வீரமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, முன்னாள்ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், கன்னையன், பிரகாஷ், கொழந்தை,  சதிஷ், கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள்,  தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர்  கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884