Type Here to Get Search Results !

வட்டார அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் நடைபெற்றது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கட்டளை மேம்படுத்துவதற்காக திருச்சியில் 2022 நவம்பர் 28 அன்று வானவில் மன்றம் நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது. மாணாக்கர்கள் சிந்தனையில் புதிய ஆய்வு மாதிரிகளை உருவாக்க ஆர்வமூட்டுதல் மற்றும் அவர்களால் உருவாக்கப்படும் மாதிரிகளுக்கு உரிய காப்புரிமையைப் பெற வழிகாட்டுதல் மாணவர்கள் பல்வேறு திறனறி தேர்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்க தேவையான அடிப்படை விவரங்களை வழங்கி ஊக்கமளித்தல் உள்ளிட்ட உயரிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வானவில் மன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தர்மபுரி ஒன்றியத்தில் வானவில் மன்ற செயல்பாடுகளை அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நேர்த்தியாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக மூன்று வானவில் மன்ற தன்னார்வ கருத்தாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும்  அரசு உதவி பெறும்  நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆறு , ஏழு மற்றும் எட்டு வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டியும், மாணவர்களிடையே புதுமையான செயல்பாடுகளை அடையாளம் கண்டு வானவில் மன்றம் திட்டத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட EMIS செயலியில் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்ட மாணாக்கர்கள் கேட்கும் கேள்விகள் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர். 

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வானவில் மன்ற போட்டிகள் பள்ளி வட்டார மாவட்ட மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024-25  கல்வியாண்டிற்கான வட்டார அளவிலான  வானவில் மன்றப் போட்டிகள் மதிப்புமிகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதி சந்திரா அவர்களின் அறிவுறுத்தலுக்கணங்க 9.11.2024 அன்று  நகராட்சி தொடக்கப்பள்ளி அப்பாவு நகர் பள்ளியில் நடைபெற்றது. இதில் தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற  22 அறிவியல் மன்றக் குழுக்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் நீர்நிலைகள் சுத்திகரிப்பு தொழில் நுட்பங்கள்,  பசுமை உட்கட்டமைப்பு நகர்ப்புற வடிவமைப்பு,  சுற்றுச்சூழல் மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு, உணவு பதப்படுத்துதலும் வேதியியல் மாற்றங்களும், கட்டுமான தொழில்நுட்பத்தில் கணித கோட்பாடுகள் ஆகிய. தலைப்புகளில் தாங்கள் செய்து வந்த ஆய்வு மாதிரிகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை விளக்கினர்.

தர்மபுரி வட்டார அளவிலான போட்டிகளில் சிறப்பாக தங்கள் ஆய்வு மாதிரிகளை விளக்கிய வெள்ளோலை உயர்நிலைப்பள்ளி வானவில் குழு முதல் இடமும், மணலூர் நடுநிலைப்பள்ளி பாம் குழு  (Palm) இரண்டாம் இடமும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த ஜாஸ்மின் குழு மூன்றாம் இடமும் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். முன்னதாக வட்டார அளவிலான போட்டிகளை வட்டார வளமையும் மேற்பார்வையாளர் திரு.முல்லைவேந்தன் துவக்கி வைத்தார். வானவில் மன்ற கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884