Type Here to Get Search Results !

பாலக்கோடு தக்காளிமண்டியில் நிழற்கூடம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளிமண்டியில் நிழற்கூடம் மற்றும் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.


பாலக்கோடு தக்காளிமண்டியில் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நிழற்கூடம் அமைத்தல், ஆடு அடிக்கும் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததை அடுத்து கடந்த வாரம் அரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திட்ட பணிகளை கானொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து, நேற்று பாலக்கோடு தக்காளிமண்டியில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அமானுல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், ஜெயந்திமோகன், ரூஹித், சரவணன், கிளை செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சக்திவேல், பனங்காடுகுமரன், மன்சூர், மாதப்பன், பார்த்தீபன், குத்தகைதாரர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies