வள்ளல் அதியமான் கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 28 அக்டோபர், 2024

வள்ளல் அதியமான் கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

vallaladhiyamankottam%20%5Bphotoutils.com%5D

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கீழ் இயங்கும் வள்ளல் அதியமான் கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி விவரம்:

  • பதவி: நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian cum Caretaker)
  • ஊதியம்: ரூ.7700-24200 (சிறப்பு காலமுறை ஊதியம் 4)
  • காலிப்பணியிடங்கள்: 1 (ஒன்று)
  • இன சுழற்சி முறை: பழங்குடியினர் (Scheduled Tribes)


தகுதி:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் சான்றிதழ் (C.L.I.S.)


வயது:

  • 01.07.2024 அன்று 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

தருமபுரி மாவட்ட இணையதளம் https://dharmapuri.nic.in/ மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 08.11.2024 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad