மாவட்டத்தின் குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து ராச்சத மோட்டர்கள் மூலம் பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. இது போன்று காவேரிஉபரிநீரை குழாய் மூலம் மாவட்டத்தில் உள்ள பொதுபணிதுறை 9அணைகள், 944 ஏரிகளுக்கு தண்ணீரை நிறப்பினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுபாடு குறையும், விவசாயம் செழிக்கும்.
தமிழக அரசுக்கு வலியுறுத்தும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரைநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பாலக்கோடு கடைவீதி, எம்ஜிரோடு, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் மெயின் ரோடு, இஸ்துபி மைதானம் ஆகிய பகுதிகளில் வணிகர்கள் அனைத்து கடைகளும் கடை அடைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக