Type Here to Get Search Results !

கல்கூடப்பட்டி அருகே ரயில் மோதி கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே சாவு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரியப்பசெட்டி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது .52) கூலி தொழிலாளி, இவர்  நேற்று மாலை பாலக்கோடு அருகே உள்ள கல்கூடப்பட்டி ரயில்  தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார், அப்போது தர்மபுரியிலிருந்து இருந்து பெங்களுர் நோக்கி சென்ற காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் இவர் மீது மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த தர்மபுரி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம்  குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies