Type Here to Get Search Results !

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறும் - மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, 04.10.2024 அன்று நிர்வாக காரணங்களால் நடைபெறவில்லை என்றும், இம்மாதத்திற்கான கூட்டம் வருகின்ற 18.10.2024- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. இரா.காயத்ரி அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884