Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே இளம் பெண் தற்கொலை? உறவினர்கள் கொலை என காவல் நிலையத்தை முற்றுகை.


பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி நந்தினி (வயது26). தினேஷ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன்  மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை நந்தினி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 

இது குறித்து தகவல் அறிந்து நந்தினியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்துவந்து உடலை பார்த்து கதறி அழுதனர். பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies