Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனருமான  பேரறிஞர் அண்ணா   அவர்களின் 116வது பிறந்த நாள் விழா பாலக்கோடு பேரூர் கழகம் சார்பில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி   தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் ஜி.எல்.வெங்கடாசலம், ஒன்றிய துணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பேருந்து நிலையத்தில் முன்பு உள்ள திமுக கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். அதனை தொடர்ந்து  பேரறிஞர் அண்ணாவின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கினைப்பாளர் ஆனந்த், கிளைசெயலாளர் ராஜீ, மாவட்ட  ஒன்றிய பிரதிநிதிகள், கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies