Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பதன் காரணமாக சுற்றுலாப் பணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை.


கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாகவும் காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.


இந்நிலையில் நேற்று காலை நேரத்தில் வினாடிக்கு 14000 கன அடியாக அதிகரித்து வந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து நீடித்து வருகிறது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies