Type Here to Get Search Results !

ஏரியூர் அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள எம்.தண்டா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30) இவரது மனைவி பிரியா (வயது 24) இவர்களுக்கு கடந்த 6 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவின் (5) என்ற மகனும், அக்ஷனா என்ற (3) வயது மகளும் உள்ளனர். வெங்கடேஷ் மும்பையில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். திருமணம் ஆனதிலிருந்து இவர்களுக்கு வரதட்சணை தொடர்பான பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் மும்பையில் இருந்து சொந்த ஊரனா எம். தண்டா வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததிலிருந்து கணவன் மனைவி இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு பிரியா தூக்குப்போட்டு இறந்துவிட்டதாக கூறி வெங்கடேஷ் மற்றும் உறவினர்கள் பிரியாவின் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.


இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஏரியூர் போலீசார் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியா இறப்பு தொடர்பான தகவல் அறிந்த  உறவினர்கள் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குவிந்தனர்.


மேலும் பிரியாவின் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பிரியாவிற்கு திருமணம் ஆகி 6 1/2 ஆண்டுகளே ஆனதால் தர்மபுரி உதவி கலெக்டர் காயத்ரி விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பிரியாவின்  உறவினர்களிடம் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து உறவினர்கள் இறந்த பிரியாவின் உடலை பெற்றுக் கொண்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies