Type Here to Get Search Results !

மாதம்பட்டி கிராமத்தில் வழி தகராறில் அண்ணனை அடித்த தம்பி உட்பட இருவர் கைது


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த அல்ராஜி (வயது.64) இவர் பாலக்கோட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், இவருக்கும் இவரது தம்பி கருங்கண்ணன் (வயது .60) என்பவருக்கும் நிலம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.


இந்நிலையில் கடந்த 15ம் தேதி மாலை இவரது வீட்டிற்க்கு செல்லும் வழியில் அவரது தம்பி கருங்கண்ணன்  ஹாலோ பிரிக்ஸ் கற்களை கொட்டி வைத்துள்ளார். இதனை கண்ட அல்ராஜி வழியில் கற்களை கொட்டி வைத்தால் எவ்வாறு செல்வது, எனவே கற்களை அகற்றும்படி கூறி உள்ளார்.


இதில் ஏற்பட்ட தகராறில் கருங்கண்ணன் மற்றும் அவரது மகன் மாதேஷ் (வயது.33) ஆகியோர் அல்ராஜியை கட்டையால் தலையில் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்தவரை, அக்கம் பக்கத்தினர்  மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இதுகுறித்து  அல்ராஜி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் கருங்கண்ணன், மாதேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies