Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம்.


தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை  இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை  காவல் உதவி ஆய்வாளர் யுயல்மூர்த்தி உள்ளிட்ட குழுவினர் தீவிர சோதனையின்  காரிமங்கலம் மொரப்பூர் ரோடு,  கரகப்பட்டி(கள்ளுக் கடை) பஸ் ஸ்டாப் அருகே ஒரு மளிகை உள்ள கடையிலும் மற்றும் பாலக்கோடு சாலை, பொம்மள்ளி  கூட் ரோடு அருகில் ஒரு மளிகை கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல்  செய்யப்பட்டது. 


காரிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில்,  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள்   தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 2 கடைகளுக்கும் தலா ரூபாய்.25000 அபராதமும், 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்து   உத்தரவிட்டார். 


அதனை  காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர்  யுயல்மூர்த்தி ஆகியோர் இணைந்து,  இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் நேரில் நோட்டீஸ் வழங்கி  உடன் அபராதம் செலுத்திடவும்,  15 தினங்கள் கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூடி விட்டு சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies