Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.


காவிரி கரையோரங்களில் பேய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா இரு அணைகளில் இருந்தும் திறந்து விடப்படும் நீராளும் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது இந்நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீரானது   நேற்று வினாடிக்கு 21,523 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டது.


இதன் காரணமாகவும் காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும்  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று  காலை  நிலவரப்படி   வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை நிலவரப்படி  22,000 கன அடியாகவும் அதிகரித்தது இந்நிலையில் இன்று காலை தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக உள்ளது.

இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று முதல் தடை விதித்துள்ளது.


மேலும் நீர்வரத்து அதிகரித்துடன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884