Type Here to Get Search Results !

அனுமந்தபுரம் அருகே வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை, கடந்த ஜூன் மாதம் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான கட்டிட மேஸ்திரியுடன், 21 வயதான  இளம்பெண்னுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை அதே பகுதியை 35 வயது நபர் வீடியோ எடுத்து  ஆபாச காட்சியை வாட்ஸ் ஆப்பில் பரவ விட்டுள்ளார், இதையறிந்த கூலி தொழிலாளி தனது மனைவியை கடுமையாக பேசியுள்ளார், இதனால் மனமுடைந்த அவரது மனைவி நேற்று மாலை எறும்பு கொல்லி சாக்பீஸை தின்று உயிருக்கு போராடி கொன்டிருந்தார், இதையறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசுமருத்துவ மனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இது குறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் கட்டிட மேஸ்திரியையும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோ பரவவிட்டவரையும் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்து பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். இளம்பெண்னின் ஆபாச வீடிேயோ வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies