Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு அருகே சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை காவல் நிலையத்தில் புகார்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த விவசாயி மணி (வயது.45) இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர், இவரது மூத்த மகள் தெய்வானை (வயது.17) என்பவர் கடந்த ஆண்டு +2 முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அனைவரும் உறங்க சென்றனர். நேற்று காலை கண்விழித்தபோது தெய்வானை காணவில்லை, பதற்றமான குடும்பத்தினர்.


நண்பர்கள் உறவிணர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தரக்கோரி மணி  பாலக்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,  போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான   சிறுமியை தேடி வருகின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884