Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி கூட்டஅரங்கில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர்  பள்ளி கூட்டஅரங்கில் ஜெர்தலாவ் ஊராட்சி  பி.செட்டி அள்ளி, தண்டுகாரனஅள்ளி ஆகிய 3  ஊராட்சிகளை  சேர்ந்த பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்  ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நாகராஜன் தலைமையில் நடைப்பெற்றது.


இம்முகாமிற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேனுகா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுதிட்டம், சமுகநலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புதிட்டம், வேளாண்மைக் துறை மூலம் மானியவிலையில் விவசாயிகளுக்கு  இடுபொருட்கள், இ.சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளிட்ட  தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.


இம்முகாமில் இலவசமின்சாரம், பட்டாபெயர் மாற்றம், இலவசவீட்டுமனை பட்டா, முதியோர் உதவிதொகை, மகளிர் உரிமைத்தொகை குடும்பஅட்டை உள்ளிட்டவை வேண்டி பொது மக்கள் மனு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், முத்துமணி ஆனந்தன், கனபதி, மணி, துணைத் தலைவர்கள் , ஊராட்சி செயலாளர்கள் கோவிந்தன், சஞ்சீவன், தாமோதரன்,  வார்டு உறுப்பிணர்கள் மற்றும் அனைத்து அரசு துறையை சார்ந்த  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies