Type Here to Get Search Results !

கலைஞர் கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில்அமைதி பேரணி


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் திமுக மாவட்ட கழக அலுவலகம் முன்பிருந்து திமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி, மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி,  பேரூராட்சி தலைவர்கள் BCR.மனோகரன்,  பி.கே.முரளி, எம்.ஏ.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், அன்பழகன், முனியப்பன், பி.கே.அன்பழகன், எம்.வீ.டி.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய அமைதிப் பேரணி மொரப்பூர் சாலை முதல் இராமசாமி கோயில் வரை ஊர்வலமாக சென்று இராமசாமி கோயில் முன்பு உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர், அதுசமயம் தொண்டர்கள் கலைஞர் கருணாநிதி வாழ்க என கோஷமிட்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி,  முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் வெங்கடாசலம், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி, ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர்,  கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies