Type Here to Get Search Results !

தருமபுரி புத்தக திருவிழா வரும் அக். 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.


தருமபுரி மாவட்ட நிருவாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து, 2024 ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழாவினை அக்டோபர் 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தகவல்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய, அவர்களிடையே வாசிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. அவ்வகையில் மாவட்ட நிருவாகம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களிடையேயும் புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, அங்கிருந்தும் மாணவர்கள் புத்தகத் திருவிழாவைக் காண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், பெண்கல்வி பற்றியும், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.


இதனைச் சார்ந்து, கல்லூரி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும், கல்லூரியிலும் கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், விவாத மேடை, பட்டிமன்றம் போன்ற போட்டிகளை நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies