Type Here to Get Search Results !

கம்மநாயக்கன்பட்டி ஏரியில் சட்டவிரோதமாக நொரம்புமண் அள்ளிய டிராக்டர், ஜே.சி பி.பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அடுத்துள்ள கம்மநாயக்கன்பட்டி ஏரியில் சட்டவிரோதமாக நொரம்புமண் கடத்துவதாக வருவதாக பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகத்திற்க்கு இரகசிய தகவல் கிடைத்து, அதனை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கம்மநாயக்கன்பட்டி ஏரியில்  கண்காணிப்பில்  ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஜே.சி.பி.எந்திரம் மூலம் நொரம்பு மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை  கண்டதும், தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து 8 இலட்சம் ரூபாய் மதிப்பிலான  ஜே.சி.பி, எந்திரம், டிராக்டர் மற்றும் டெய்லரை  பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies