Type Here to Get Search Results !

பாலக்கோடு, மாரண்டஅள்ளி சுற்றுவட்டாரத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.

தர்மபுரி மாவட்டம். பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர்  பானுசுஜாதா ஆகியோர்   உத்தரவின்பேரில், பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், குட்கா சோதனை மேற்கொண்டதில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையில் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.


அதே போன்று   மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் மாரண்டஅள்ளி நான்கு ரோடு அருகில் உள்ள பீடா கடையில் புகையிலை பொருட்கள் விற்பனையை  கண்டறிந்து ஆயிரத்து 500 ரூபாய்  மதிப்புள்ள குட்கா  பறிமுதல் செய்யப்பட்டு  25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து  கடைக்கு சீல் வைத்தனர்.


இந்த ஆய்வின்போது மாரண்டஅள்ளி பாலக்கோடு இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், சுப்ரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், காவலர் வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies